அழகிய தருணங்கள்


 

அழகிய தருணங்கள்
அழகிய தருணங்கள் 


சாரல் மழையில் நனைந்த காற்று 

தென்றலாய் சில்லிடுகிறது ...!

மழைநீர் கொட்டும் சத்தம் புதியதோர் 

இசையமைக்கிறது 

மலர்களெல்லாம் நீரில் நனைந்து 

தலையாட்டி புன்னகைக் கிறது 

எல்லோர் மனதும் மழையில் நனையவே 

மன்றாடிக் கெஞ்சுகிறது...!

பல மைல் தூரம் கடந்து வரும் 

இந்த நீர்த்துளிகள் 

தேவனின் 

தீர்த்தமாகவும் இருக்கலாம் ..!

ஆக்கம் 

கசுன் 

 



Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்